• குறிஞ்சி
    • நியூட்ரினோ
    • கானுயிர் பாதுகாப்பு
  • முல்லை
    • கிழக்கு தொடர்ச்சி மலை
    • சரணாலயங்கள்
    • பொதிகை
    • மேற்கு தொடர்ச்சி மலை
  • மருதம்
    • மரபணு மாற்றுப் பயிர்கள்
    • நீர் அரசியல்
  • நெய்தல்
    • இணையம்
    • கல்பாக்கம்
    • கூடங்குளம்
    • செய்யூர்
    • மன்னன் வளைகுடா
  • பாலை
    • காவிரி
    • நெடுவாசல்
    • மீத்தேன்
    • ஹைட்ரோ கார்பன்
  • பூவுலகு இதழ்கள்
    • 2009
      • ஜூன் 2009
      • அக் 2009
      • நவ 2009
    • 2010
      • ஜனவரி 2010
      • பிப் 2010
      • ஏப்ரல் 2010
      • மார்ச் 2010
      • மே 2010
      • செப் 2010
      • டிச 2010
    • 2011
      • மார்ச் 2011
      • மே 2011
      • ஜூலை 2011
      • செப் 2011
    • 2012
      • ஜூலை 2012
      • செப் 2012
    • 2013
      • ஜனவரி 2013
      • மார்ச் 2013
      • மே 2013
    • 2014
      • மார்ச் 2014
      • மே 2014
      • ஜூலை 2014
      • செப் 2014
    • 2015
    • 2016
    • 2017
      • மே 2017
      • ஜூன் 2017
    • 2018
    • 2019
  • புதிய இதழ்கள்
    • ஜனவரி-பிப்ரவரி 2019
    • மார்ச்-ஏப்ரல் 2019
  • மின்னூல்
  • தொடர்புக்கு
பூவுலகு
  • எங்களைப் பற்றி
  • ஆசிரியர் குழு
  • களத்தில் இறங்குங்கள்
  • சூழல் இணைப்புகள்
  • தொடர்புக்கு
பூவுலகு
  • குறிஞ்சி
    • நியூட்ரினோ
    • கானுயிர் பாதுகாப்பு
  • முல்லை
    • கிழக்கு தொடர்ச்சி மலை
    • சரணாலயங்கள்
    • பொதிகை
    • மேற்கு தொடர்ச்சி மலை
  • மருதம்
    • மரபணு மாற்றுப் பயிர்கள்
    • நீர் அரசியல்
  • நெய்தல்
    • இணையம்
    • கல்பாக்கம்
    • கூடங்குளம்
    • செய்யூர்
    • மன்னன் வளைகுடா
  • பாலை
    • காவிரி
    • நெடுவாசல்
    • மீத்தேன்
    • ஹைட்ரோ கார்பன்
  • பூவுலகு இதழ்கள்
    • 2009
      • ஜூன் 2009
      • அக் 2009
      • நவ 2009
    • 2010
      • ஜனவரி 2010
      • பிப் 2010
      • ஏப்ரல் 2010
      • மார்ச் 2010
      • மே 2010
      • செப் 2010
      • டிச 2010
    • 2011
      • மார்ச் 2011
      • மே 2011
      • ஜூலை 2011
      • செப் 2011
    • 2012
      • ஜூலை 2012
      • செப் 2012
    • 2013
      • ஜனவரி 2013
      • மார்ச் 2013
      • மே 2013
    • 2014
      • மார்ச் 2014
      • மே 2014
      • ஜூலை 2014
      • செப் 2014
    • 2015
    • 2016
    • 2017
      • மே 2017
      • ஜூன் 2017
    • 2018
    • 2019
  • புதிய இதழ்கள்
    • ஜனவரி-பிப்ரவரி 2019
    • மார்ச்-ஏப்ரல் 2019
  • மின்னூல்
  • தொடர்புக்கு
  • Follow
    • Facebook
    • Twitter
    • Youtube
    • Instagram
இயற்கையின் கொடை – சித்த மருத்துவர் சொர்ண மாரியம்மாள்
Home
சித்த மருத்துவ சூழலியல்

இயற்கையின் கொடை – சித்த மருத்துவர் சொர்ண மாரியம்மாள்

April 29th, 2017 poovulagu சித்த மருத்துவ சூழலியல், மே 2017 0 comments

இயற்கையின் கொடை என்பது அளப்பறியது. இயற்கையின் ஒரு சிறு புள்ளிதான் மனிதன். ஆனால் மிக உன்னத நிலையை அடையும் பேற்றையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் வலிமையும் அறிவும் பெற்றவனாகி சிவத்திற்கு ஒப்பாகவே கூறப்படுகிறான்.

இத்தகைய மனிதன் இயற்கையோடு இணைந்து வாழப் பழகிக்கொள்ளும் வரையில் தான் இத்தகைய மேன்மைகளை அடையமுடியும். இதற்கான வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக்கொடுப்பதே ‘சித்த மருத்துவம்”. சித்த மருத்துவம் பாரதத்திற்கு மட்டுமே சொந்தமானது எனினும் சித்தர்களின் ஞானமும், அறிவும் அவர்களின் பல தரப்பட்ட ஆய்வுகளின் அறிவியல் முடிவே சித்த மருத்துவம் என்பதால் சித்தர்களை முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தும் விதமாக ‘சித்த மருத்துவம்” என்பதாயிற்று.

மருத்துவம் என்பதற்கு சித்தர்கள் வகுத்த இலக்கணம் நான்கு. இவற்றுள் மூன்று ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறையும், ஸ்தூல உடலையும், அவனுள் இயங்கும் சூட்சும உடலையும் வளமை உடையதாக்கும் பல முறைகளும் அடங்கும். மருத்துவ இலக்கணத்தின் இறுதிப் பங்கே மருத்துவனைச் சாரும். மனித உடலின் இயங்கியலைப் படம்பிடித்து, அதன் அடிப்படையிலேயே நோய்களை வகுத்து அதன் காரணிகளைத் தொகுத்து அவற்றை நீங்கும் மருந்து முறைகளைக் கொடுத்துள்ளனர். இம்மருத்துவ முறைகட்கு அடிப்படையாக இருப்பது பூமியே. பூமி என்பதில், மலை, மண், கடல் என இயற்கையில் தோன்றும் கனிமங்களே! இதில் தாவரம் தனக்குத் தேவையான சத்துக்களையும், மருத்துவ தாதுக்களையும் பிரித்து தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வன்மை பெற்றவை. அதனால் தான் மூலிகைகளை முதன்மை மருந்தாகவும், இவற்றால் பாதுகாக்க இயலாத நிலையில் தாதுக்களைக்கொண்டு மருத்துவம் செய்யக் கூறியுள்ளனர். இவற்றை உடலில் வினைபுரியத்தக்க வகையில் மாற்றியமைக்கும் இரசாயன முறை என்பது உலகெங்கிலும் காணமுடியாத, ஒப்புமை இல்லாத ஒரு இரசாயன முறை.

காலப்போக்கில் நவீன மருத்துவத்தின் தாக்கம் சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை புரட்டிப்போட்டதின் விளைவு நோய்க்கூட்டம் பல்கிப் பெருகிவிட்டது. ‘உடம்பாரழியின் உயிராரழிவர்” என்பதும் அதனால் ‘நோய்க்கிடங்கொடேல்” என்பதும் தான் சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள். சித்த மருத்துவ கோட்பாடுகள் யாவும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும். நோயற்ற சமுதாயம் படைக்க வேண்டும் என்பதே என் கட்டுரையின் நோக்கம்.

தொடரும்…

Facebook Twitter WhatsApp
Next article பாலைவனமாகும் பள்ளிக்கரணை - சங்கர், ஒளிப்படக்கலைஞர்
Previous article சுற்றுச்சூழல் போராட்டங்களும் கிராம சபை தீர்மானங்களும் - நந்தகுமார்

poovulagu

Related Posts

விநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால் பூவு - சிறுவர்களுக்கான சூழலியல்
May 28th, 2017

விநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால்

ரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27 சிறப்பு தினங்கள்
May 27th, 2017

ரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27

ரோமுலஸ் விட்டேகர் எனும் ஆளுமை - ரகுநாத் கானுயிர் பாதுகாப்பு
May 24th, 2017

ரோமுலஸ் விட்டேகர் எனும் ஆளுமை - ரகுநாத்

Leave a Reply Cancel reply

சூழலியல் சொல்

வாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது?' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, " உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்", என்றார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்
  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
  • பாலை
  • பூவுலகு இதழ்கள்
  • புதிய இதழ்கள்
  • மின்னூல்
  • தொடர்புக்கு
  • Back to top
பூவுலகு Facebook பக்கம்
தொடர்புக்கு

பூவுலகின் நண்பர்கள்,
தமிழ்நாடு & புதுச்சேரி

106/2, முதல் தளம்
கனக துர்கா வணிக வளாகம்
கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை-600026
+91 9444065336, 9841624006
+91 44 24839293
poovulagumagazine@gmail.com

© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.
Powered by Incien